tamilnadu

img

மாநில ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி 

 கரூர், ஆக.20- தமிழ்நாடு ஜூடோ சங்கம் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாநில சப் ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இருபத்தி எட்டு மாவட்ட அணிகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி என மொத்தம் இருபத்தி ஒன்பது அணிகளை சேர்ந்த சுமார் ஆயிரம் வீரர் வீராங்க னைகள் கலந்து கொண்டனர்.  கரூர் மாவட்டத்தின் சார்பாக பல்வேறு பள்ளி வீரர்களை யும் உள்ளடக்கிய மாவட்ட ஜூடோ விளையாட்டு அணி யினர் ஜூடோ சங்க மாவட்ட தலைவர் ராமசுப்பிரமணி யன், செயலர் ஜெயபால், பொருளாளர் துரை ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர். இதில் பரணி பள்ளி களின் ஜூடோ வீரர்கள் 5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்று மொத்தம் 37 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றனர்.  மேலும் நெரூர் அரசு பள்ளி 1 தங்கம், 2 வெண்கலம், லாலாபேட்டை அரசு பள்ளி 1 தங்கம், 1 வெண்கலம், குளித்தலை அரசு பெண்கள் பள்ளி 1 வெள்ளி, 1 வெண் கலம், கே.வி.வி. பள்ளி 2 வெள்ளி, 1 வெண்கலம் பெற்று வென்றனர். இதன் மூலம் கரூர் ஜூடோ அணியினர் 7 தங்கம், 6 வெள்ளி, 8 வெண்கலம் வென்று மொத்தம் 61 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து 12-வது ஆண்டாக கரூர் அணியினர் தட்டிச் சென்றனர்.  22 புள்ளிகளுடன் மதுரை மாவட்ட அணி இரண்டா வது இடத்தையும், 13 புள்ளிகளுடன் கோவை மாவட்ட அணி மூன்றாவது இடத்தையும் பெற்றனர். மேலும் சிறந்த ஜூடோ விளையாட்டு வீரருக்கான விருதை நெரூர் அரசு பள்ளி மாணவி ஜனனி வென்றார்.  கரூர் அணியின் சாதனையையொட்டி கரூர் மாவட்ட தலைவரும் பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வருமான ராமசுப்பிரமணியன், மாவட்ட செயலர் ஜெயபால், பொருளாளர் துரை, பயிற்சியாளர்கள் அமலா, பாலசுப்பிரமணியன், ஜெயப்ரகாஷ், பார்த்திபன், முத்து லட்சுமி, ரம்யா, சண்முகம் மற்றும் அணியினருக்கு மாநில ஜூடோ சங்க சேர்மன் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. வால்டர் தேவாரம், மாநில தலைவர் விஜய் மோகன், மாநில செய லர் சதீஷ், கரூர் மாவட்ட ஜூடோ சங்க தலைமை புர வலர் மோகனரங்கன் ஆகியோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.