tamilnadu

கரூர் காவிரி ஆற்றில் கதவணை  கட்ட ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு

கரூர்:
கரூரில் உள்ள காவிரி ஆற்றில்கதவணை கட்ட 500 கோடி ரூபாயை தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் கூட்டம் கரூரை அடுத்த காந்தி கிராமம் பகுதியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், காவிரியில் கதவணை கட்ட 500 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கரூர் மாவட்டத்தில்குடிநீர் பிரச்சனை முழுவதும் தீர்க்கப்படும் என்று தெரிவித்தார்.

;