கரூர், மே 10- தமிழக அரசு, ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 ஆக உயர்த்தியது உள் ளிட்டவை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்டக் குழு சார்பில் கரூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் எம்.எஸ்.அன்பழ கன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கெ. சக்திவேல் பேசினார். மாவட்ட நிர்வாகிகள் கெ. செல்வராணி, எல்.பால சுப்பிரமணி, வட்ட கிளை நிர்வாகிகள் செல்வன், டி.லட்சுமணன், அறிவழகன், பிரேம்குமார், சந்துரு, பால சுப்பிரமணியம் உள்ளிட் டோர் கலந்து கொண்ட னர். தாந்தோணி ஒன்றிய அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன் கண்டன உரையாற்றினார்.