tamilnadu

img

‘புத்தாண்டை புத்தகங்களுடன் கொண்டாடுவோம்’ அறிவியல் இயக்கம் நடத்திய புத்தக கண்காட்சி

கரூர், ஜன.1- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் ஆங்கில புத்தாண்டையொட்டி கரூர் அருகே உள்ள காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டை புத்தகங்க ளுடன் கொண்டாடும் விதமாக டிச.31, ஜன.1 ஆம் தேதி இரண்டு நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்றது.  குழந்தைகளுக்கான கதை, ஓவிய புத்தகங்கள், அறிவியல், வரலாறு, கவிதை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. அனைவரும் புத்தா ண்டுக்கு புத்தகங்களை பரிசாக வழங்க வும், அனைவர் மத்தியிலும் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கத் திற்காக இந்த புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சிக்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைத் தலை வர் காமராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஜான்பாட்ஷா வரவேற்றார். கிரெசண்ட் பள்ளி முதல்வர் முனைவர் என்.சாகுல்அமீது சிறப்புரையாற்றினார். கரூர் விக்டரி பேர்ட்ஸ் லயன்ஸ் சங்க நிர்வாகி  சூரிய கதிரவன் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

;