tamilnadu

img

கராத்தே போட்டி: பரணி வித்யாலயா சாதனை

 கரூர்: அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான ‘கியோகுஷின்’ கராத்தே போட்டியில் கலந்து கொண்ட பரணி வித்யாலயா மாணவ, மாணவியர் 20 தங்கம், 16 வெள்ளி, 31 வெண்கலம்  வென்று அபார சாதனை புரிந்துள்ளனர். போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் மோகனரெங்கன், செயலாளர்  பத்மாவதி மோகனரெங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்ரமணியன், முதல்வர் சுதாதேவி. ‘கியோகுஷின்’ அகில இந்திய தலைவர் ‘சிகான்’ ராமதாஸ், துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்தினர்.