tamilnadu

img

பரணி வித்யாலயா பள்ளிக்கு சர்வதேச விருது

கரூர், டிச.3- லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பு சார்பாக தென்னிந்திய அளவிலான கல்வி மாநாடு மற்றும் சர்வ தேச விருது வழங்கும் விழா நவ.29 அன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் கரூர் பரணி  வித்யாலயா சி.பி.எஸ்.இ பள்ளிக்கு சிறந்த பள்ளிக் கான “சர்வதேச விருது”  வழங்கப்பட்டது. லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் தென் இந்தியா விற்கான இயக்குனர் சுனந்தா விருதினை வழங்க பரணி வித்யாலயா பள்ளியின் முதன்மை முதல்வர் முனை வர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, பள்ளி யின் நிர்வாகக்குழு உறுப்பி னர் சுபாஷினி ஆகியோர் பெற்றுக் கொண்டனர். பரணி வித்யாலயா பள்ளி இந்த உயரிய விருதை தொ டர்ந்து மூன்றாவது முறை யாக பெற்றுள்ளது என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். பரணி வித்யாலயா பள்ளி சர்வதேச விருது பெற உறுதுணையாக இருந்த லண்டன் பிரிட்டிஷ் கவுன்சில் அமைப்பின் பள்ளிக ளுக்கான கௌரவ தூது வரும், பள்ளியின் முதன்மை முதல்வருமான முனைவர் ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களை பரணி பார்க் கல்விக் குழும தாளாளர் மோகனரெங்கன், செயலர் பத்மாவதி மோகனரெங்கன் மற்றும் பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.