கரூர், நவ.24- தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் மேல் நிலைப்பள்ளியில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவர் அ.சேகர் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன்.ஜெயராம் வேலை அறிக்கை யை முன்வைத்து பேசினார். மாநில பொருளாளர் நா.வினோத்குமார் நிதி நிலை அறிக்கையை முன்வைத்து பேசி னார். அண்மைக் கால போராட்ட படிப்பி னைகளும், எதிர்கால சவால்களும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மு. அன்பரசு சிறப்புரையாற்றினார். மாநில பொருளாளர் மு. பாஸ்கரன் கூட்டத்தை நிறைவு செய்து பேசினார். கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்க மாநி லச் செயலாளர் சி. ஜே. குறிஞ்சிவேலன் நன்றி கூறினார். இதில் நூற்றுக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். புதிய மாநில நிர்வாகிகள், மாநில துணைத் தலைவர்கள் ராஜேஷ், குமார், மாநிலச் செயலாளர்கள் டேவிட் கிரிஸ் டோபர், அன்வருள்ஹக், மாநிலத் தணிக்கையாளராக பாலமுருகன் ஆகியோர் கூடுதல் புதிய மாநில நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு இணைத்துக் கொள்ளப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை கை விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அர சால் தற்போது அறிவித்துள்ள ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஏற்படும் ஊதிய மாற்றம் 1-1-2016 முதல் கருத்தியலாகவும் பணப்பலன் 1-10-2017 முதல் எனவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இதனால் 1-1-2016 முதல் 3-9 -2017 முடிய 21 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் தோராயமாக ஒவ்வொரு ஊழியருக்கும் குறைந்த பட்சம் ரூ 42 ஆயிரம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு போராடிய ஆசி ரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தி யில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. எனவே தமிழக அரசு உடனடி யாக 1-1-2016 முதல் 30-9- 2017 முடிய 21 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் வழங்கிட வேண்டும். தற்பொழுது கல்வித்துறையில் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் இளநிலை உதவியாளர் பதவியிலிருந்து, உதவியாளர் பத விக்கு, பதவி உயர்வுக்கான தகுதி பெற்று நீண்ட காலமாக பதவி உயர்வு வழங்காமல் பணிபுரிந்து வருகின்ற னர். இப்பதவிக்கு நேரடி பதவி நிய மனம் மூலம் காலி பணியிடத்தை கல்வித் துறை நிர்வாகம் செய்து வரு கிறது. எனவே இப்பதவிக்கு நேரடி பதவி நியமனம் வழங்கும் முறையை கை விட வேண்டும். ஆசிரியர்கள் மாண வர்கள் எண்ணிக்கையின் அடிப்படை யில் கூடுதல் அமைச்சுப் பணியாளர் கள் பணியிடங்கள் உருவாக்கிட நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.