tamilnadu

img

காவலர் வீரவணக்க நாள்: மினி மாரத்தான் போட்டி

கரூர், அக்.21-  கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் கரூர் நகர உட்கோட்ட காவல்துறை இணைந்து நடத்திய காவலர் வீர வணக்க நாள் மினி மாரத்தான் போட்டி யை கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாரத்தான் வீரர்கள் பங்கேற்றனர். முன்னதாக மாரத்தான் கரூர் கடைவீதி, பேருந்து நிலையம், சர்ச் கார்னர் வழியாக மீண்டும் திருவள்ளுவர் மைதானத்தை வந்தடைந்தது. மாரத் தான் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற  வீரர்களுக்கு மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி னார். மாவட்ட கூடுதல் காவல் கண்கா ணிப்பாளர் பாஸ்கரன், கரூர் நகர காவல் ஆய்வாளர் உதயகுமார், போக்கு வரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.