tamilnadu

img

தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கல்

கரூர் மாவட்டம், புகளூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் பாதுகாப்பு பணியாளராக (ஒப்பந்த தொழிலாளி) கலைச்செல்வன் பணிபுரிந்து வருகிறார். இவர், சிஐடியு சங்க மாவட்ட குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர், தனது சொந்த நிதியிலிருந்து கரூர் நகரத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்கிற மற்றும் வறுமையில் வாடுகிற 10 தொழி லாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.  சிஐடியு சங்க மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சிஐடியு சங்க மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் கா.கந்தசாமி, எம்.தண்டபாணி, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ராஜேந்திரன், அங்கன்வாடி சாந்தி, கலா, சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிதியுதவி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் வேலுச்சாமி குடும்பத்திற்கு மருத்துவ உதவி நிதியாக கரூர் நகரக் குழு சார்பில் ரூ ஆயிரத்தை கட்சியின் கரூர் நகரச் செயலாளர் எம்.ஜோதிபாசு வழங்கி னார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.ஹோசிமின், எஸ்.பி.ஜீவானந்தம் கலந்து கொண்டனர்.