tamilnadu

img

பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் 

 கரூர், செப்.28-  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் தடகளம், கையுந்துபந்து மற்றும் கபடி நடைபெற்றது. கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கிப் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.  இதில் பெண்கள் தடகளப் போட்டி ஆண்கள் பிரிவு 100 மீ.ஒ, 800 மீ.ஓ, 5000 மீ.ஓ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வாலிபால், கபடி ஆகிய போட்டிகளும், தடகளம்  பெண்கள் பிரிவில் 100 மீ.ஓ 400 மீ.ஓ, 1500 மீ.ஓ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் போட்டி நடத்தும் நடுவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்

;