tamilnadu

img

ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

கரூர், பிப்.17- மருத்துவப்படி, இலவச பேருந்து பயண அட்டை, ஈமக்கிரி யை செலவு நிதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். ஓய்வூதியர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்டக்குழு சார்பில் தான்தோன்றிமலை, கரூர்  ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.சுப்பிரமணியன் கண்டன உரையாற்றினார். கோவிந்தராஜன், பெருமாள், சுந்தர்ராஜன், மாலதி, நூர்ஜகான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;