tamilnadu

img

நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்காததற்கு சிபிஎம் கண்டனம்

கரூர், ஆக.7- 17-வது நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பிறகு இன்னமும் நாடாளுமன்ற உறுப்பி னர்களைக் கொண்ட தெரிவுக்குழுவோ, நிலைக் குழுவோ அமைப்பதற்கான எவ்வித அக்கறை யும் காட்டாமல் சட்டத்திருத்தங்கள் செய்வ தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் சிறப்புரையாற்றி னார். கட்சியின் முத்த தலைவர் ஜி.ரத்தின வேலு, மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இலக்கு வன், ஜோதிபாசு, சக்திவேல், ராஜூ, முரு கேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;