குளித்தலை, ஆக.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றிய குழு கூட்டம் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இளங்கோ வன், சத்யபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய ஒன்றிய செயலாளராக பிரபாகர் தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் குளித்தலை பகுதியின் பல்வேறு முக்கிய கோரிக்கையை நிறைவேற்ற கோரி வரும் 21-ம் தேதி குளித்தலை காந்தி சிலை முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.