tamilnadu

img

கரூர் முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி துவக்கம்

குளித்தலை, ஆக.6- கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவுக்கு உட்பட்டது முதலைப்பட்டி கிராமம். இது திருச்சி- கரூர் மாவட்ட எல்லையில் உள்ளது. திருச்சியிலிருந்து 20 கி.மீ.தொலைவில் உள்ளது. இங்கு ஆக்கிரமிப்பு குளத்தை மீட்க கோரி பொதுநல வழக்கு தொடர்ந்த வீர மலை, அவரது மகன் நல்லதம்பி ஆகி யோர் கடந்த வாரம் வெட்டிக் கொலை செய் யப்பட்டனர். இது குறித்து தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மதுரை ஐகோர்ட் கிளை விசாரிக்கிறது. இந்நிலையில் செவ்வாயன்று காலை ஆக்கிரமிக்கப்பட்ட 39 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணிகள் தொடங்கியது. 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். பட்டா வழங்கப்பட்டுள்ள குளத்து நிலம் குறித்து கோர்ட் உத்தரவுக்கேற்ப நட வடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.