கரூர், ஜூலை 17- கரூர் மாவட்டம் உப்பிடமங்க லம் அருகே உள்ள லிங்கத்தூரைச் சேர்ந்தவர் நடராஜன். கரூர் வாங்கப்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர்கள் சாதி ஆதிக்கர்கள். சரளப்பட்டியில் இரு வருக்கும் அருகே, அருகே தோட் டம் உள்ளது. தோட்டத்தில் இரு வருக்கும் பிரச்சனை இருந்து வந் துள்ளது. லிங்கத்தூரைச் சேர்ந்த தலித் வகுப்பினர் சுப்ரமணியன்(60). இவர் விவசாயக் கூலி வேலை செய்து வரு கிறார். கடந்த ஜூலை 14-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுப்ரமணியன், நடராஜன் தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது நடராஜன் தனக்கு வேறு வேலை உள்ளது என்று கூறிவிட்டு, தோட்டத்தில் உள்ள வேலைகளை முடித்து விட்டு வருமாறு சுப்பிர மணியத்திடம் கூறிவிட்டு சென்று விட்டார். இதனையடுத்து பக்கத்து தோட்டக்காரரான முருகேசன், அவ ரது மனைவி வளர்மதி ஆகியோர் தோட்டத்திற்கு வந்துள்ளனர். சுப்பி ரமணியன் நடராஜன் தோட்டத்தில் வேலை செய்வதை பார்த்துவிட்டு, ‘உன்னை யார் இங்கு வேலை செய்ய சொன்னார்கள், யாரை கேட்டு வேலை செய்கிறாய்’ என தகாத வார்த்தைகளால் மிரட்டி யுள்ளனர். தன்னை, நடராஜன்தான் வேலை செய்ய கூறியதாகவும், அதனால் வேலை செய்வதாகவும் சுப்ரமணியன் கூறியுள்ளார். ‘என்னடா எதிர்த்துப் பேசு கிறாய்’ என கூறி இருவரும் சுப்பிர மணியை கடுமையாக தாக்கியுள்ள னர். இத்தாக்குதலில் மயக்கம டைந்த சுப்பிரமணியன் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். நடராஜனின் மகன் தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது சுப்பிரமணி யன் விழுந்து கிடந்ததைப் பார்த்து, உடனடியாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்
சாதி ஆதிக்கர்களான முரு கேசன் மற்றும் அவரது மனைவி வளர்மதி ஆகியோர் தலித் வகுப்பை சேர்ந்த சுப்பிரமணியன் மீது தாக்கு தல் நடத்தியுள்ளதை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட் டக்குழு வன்மையாக கண்டிப்பது டன், உடனடியாக தாக்குதலுக்கு உள்ளான சுப்பிரமணியனுக்கு பாது காப்பும், உரிய நஷ்டஈடும் வழங்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீது மாவட்ட நிர்வாகமும் காவல்துறை யும் வழக்கு பதிவு செய்து கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு சங்க மாவட்டச் செயலா ளரும், தீண்டாமை ஒழிஎப்பு முன்ன ணியின் மாவட்ட குழு உறுப்பினரு மான சி.முருகேசன் கூறினார். முன்னதாக தமிழ்நாடு தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் கரூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி தலைமையில் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரமணியனை நேரில் பார்த்து ஆறுதல் கூறினர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.முரு கேசன், கட்டுமான சங்க மாவட்டத் தலைவர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோதூர் கிளை செயலாளர் நீலமேகம் ஆகி யோர் கலந்து கொண்டனர்.