tamilnadu

நாகர்கோவில், மதுரை, திண்டுக்கல் முக்கிய செய்திகள்

5 ஆண்டுகளாக திறக்கப்படாத சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியரிடம் விதொச மனு     
நாகர்கோவில், அக்.28- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளி த்துள்ள மனுவில் கூறப்பட்டு ள்ளதாவது:  கன்னியாகுமரி மாவ ட்டம் வேர்கிளம்பி பேரூரா ட்சிக்குட்பட்ட பூவன்கோடு பகுதியில் அரசு துணை சுகா தார நிலையம் 2014 ஆண்டு மாவட்ட ஆட்சியர் நிதியில் இருந்து ரூ.30 லட்சம் பொது நிதியில் இருந்து ரூ.20 லட்சமும் வேர்கிளம்பி பேரூராட்சியில் இருந்து ரூ.10  லட்சமும் செலவு செய்து  கட்டிட வேலை முடிக்கபட்டு ள்ளது. ஆனால் இதுவரை திற க்கப்பட வில்லை. இந்த பகுதி யில் அதிகமான விவசாயி கள் மற்றும் விவசாய தொழி லாளர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள பெரும்பா லான ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர். ஆகவே 2014 - 15 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிந்த பிறகும் திறக்கப்படாமல் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் திறந்து வைத்து செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க த்தின் திருவட்டார் வட்டார தலைவர் ஐசக் அருள்தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மூடப்படாத ஆழ்துளைக் கிணறு  காவல்துறை கண்டுபிடிப்பு 
மதுரை.அக்.28- மதுரை பேரையூர் தாலுகா சின்னக்கட்டளை கிராம த்தில் மூடப்படாமல் கிடந்த ஆழ்துளைக் கிணற்றை காவல்து  றையினர் கண்டுபிடித்து மூடினர். பேரையூர் தாலுகா சின்னக்கட்டளை கிராமத்தில் கட்டை யன் கோவில் பின்புறம் அபாயகரமான நிலையிலிருந்த ஆழ்துளை கிணறை சேடபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலுச்சாமி, காவலர் கருப்பையா ஆகியோர் கண்டுபிடித்த னர். உடனடியாக கிராம மக்கள் உதவியுடன் அந்த  ஆழ்து ளைக் கிணறை பாதுகாப்பாக மூடினர். திருச்சிராப்பள்ளியை அடுத்துள்ள மணப்பாறை நடுக்காட்டுப்பாட்டியில் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த தையடுத்து மதுரை மாவட்ட காவல்துறையினர் கண்டுபி டித்துள்ள மூடப்படாத முதல் ஆழ்துளைக்கிணறு இது. 

அம்பாத்துரையில் செயல்படாத ‘108’   

சின்னாளபட்டி, அக்.28-  அம்பாத்துரையில் 108 ஆம்புலன்ஸ் செயல்படா ததால் கர்ப்பிணியை மருத்து வமனைக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் ஏற்ப ட்டது. சின்னாளப்பட்டி அரசு  ஆரம்ப சுகாதார நிலைய த்திற்கு பிரசவ ஏற்பட்ட கர்ப்பி ணியை அழைத்துச் செல்வ தற்காக அவரது உறவினர் 108-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அம்பாத்துரை 108-வாக னத்திற்கு ஆட்கள் நியமிக்கப்படவில்லை.  திண்டுக்கல்லி ருந்துதான் 108 வரவேண்டுமென தகவல்  தெரிவித்துள்ளனர். இதனால் வேறுவழியின்றி வேறு வாகனத்தில் கர்ப்பிணியை மருத்துவமனைக்கு அழை த்துச் சென்றுள்ளனர். இதே போல் விஎம்எஸ் காலனியைச் சேர்ந்தவர் சரோஜா.  நூல்கண்டு சுற்றி வாழ்க்கை நடத்தி வருகிறார். செவ்வாயன்று பூச்சி ஒன்று கடித்துள்ளது. இதனால் பயந்த அவர் 108-க்கு தகவல் தெரிவித்துள்ளார். வாகனம் வராததால் வேறு வாகனத்தில் மருத்து வமனைக்கு சென்று சிகிச்சை  பெற்று வருகிறார்.  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அம்பாத்துரை பகுதியில் இயக்கப்படும் 108 வாகனத்திற்கு பணி யாளர்களை தாமதமின்றி நியமனம் செய்ய வேண்டும்.