tamilnadu

ஆயுள் சான்றிதழ்: ஆணையர் வழங்க கோரிக்கை

நாகர்கோவில், ஜுன் 2- கோவிட் 19 தொற்று- ஊரடங்கு காரண மாக தொழிலாளர்கள் ஆயுள்சான்று வழங்க முடியாத நிலையில் தொழிலாளிகளின் ஆயுள் சான்றினை ஆணையாளர் வழங்கு மாறு கட்டுமான தொழிலாளர் சங்கம்-சிஐ டியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் தமி ழக தொழிலாளர் துறை அமைச்சருக்கு அளித்துள்ள மனு விபரம் வருமாறு: குமரி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற் கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். ஓய்வூதி யம் பெறும் தொழிலாளர்கள் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் ஆயுள் சான்று கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு கோவிட் 19 தொற்று ஊரடங்கு காரணமாக தொழிலா ளர்கள் ஆயுள்சான்று கொடுக்கவில்லை.  எனவே ஓய்வூதியம் பெற்று வரும் வய தான தொழிலாளிகளின் ஆயுள் சான்றினை தொழிலாளர்கள் சார்ந்துள்ள தொழிற்சங் கம் வழியாக தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவு பிறப் பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.