நாகர்கோவில், மே.17- ஈரானில் மீன்பிடிக்கச் சென்று கோவிட் காரண மாக படகிலேயே மாதக்க ணக்கில் வாடும் 750 இந்திய மீனவர்களைதாயகம் மீட்டு வர அரசு முன்வர வேண்டும் என மீன் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறி்த்து தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு (சிஐடியு) சார்பில் மாநில தலைவர் ஜி.செ லஸ்டின், பொதுச்செயலா ளர் எஸ்.அந்தோணி, பொரு ளாளர் லோகநாதன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறி க்கையில் கூறப்பட்டுள்ள தாவது: ஈரான் நாட்டிற்கு மீன்பிடிக்க சென்று கோவிட் 19 தொற்று காரணத்தால் ஈரான் நாட்டில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தமிழக மீனவர்கள் 750 பேர் தங்க வைக்கப்பட்டனர். மீன வர்களை தமிழகம் கொண்டு வருவதற்கு தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்ட மைப்பு (சிஐடியு) மற்றும் பல்வேறு மீனவர் அமைப்பு கள் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளை வற்பு றுத்தி வருகின்றன.
தற்போது மத்திய அரசு 750 மீனவர்களையும் தனி கப்பல் மூலம் தமிழகம் கொ ண்டு வருவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் ஈரா னில் உள்ள இந்திய தூதரகம் கப்பல் பயணத்திற்கு மீனவர் ஒருவருக்கு 100 டாலர் அதா வது ரூபாய் 8000 செலுத்திட வேண்டும் என மீனவர்களிடம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களின் விசா ரத்து செய்வதற்கான செலவையும் மீனவர்கள்தான் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. கோவிட் 19 காரணத்தால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாமல் குடிநீருக்கும், உணவுக்கும் சொல்லொ ண்ணா கஷ்டங்களை அனுப வித்து வரும் மீனவர்களிடம் பணம் கேட்பது வேதனையானது. கடந்த பல மாதங்களாக மீன்பிடி தொழில் இல்லா மல் மீனவர் குடும்பங்கள் பரிதவித்து வரும் இந்த சூழ்நி லையில் மத்திய, மாநில அரசுகள் தமிழக மீன வர்களை அரசு செலவில் அழை த்துவர துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் கூறப்பட்டுள்ளது.