நாகர்கோவில், மே 19- மாணவர் சேர்க்கைக்கு உதவும் வகையில் தேவை யான சான்றிதழ்கள் உடனடி யாக கிடைக்க உதவுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவ ட்டக்குழு தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் குமரி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூற ப்பட்டுள்ளதாவது: கோவிட் 19 தொற்று தடுப்பு நடவடிக்கையாக மே 31ஆம் தேதி வரை நாடு முழு வதும் ஊரடங்கு அறிவிக்கப் பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது அத்தியாவசிய கடை கள், சிறு தொழில் நிறுவ னங்களை குறிப்பிட்ட நேரங் களில் செயல்பட அனும திக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில் கூட்டுறவு சங்க அலுவ லகங்களில் உள்ள இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை.
தற்போது கூட்டுறவு சங்க அலுவலகங்கள், இ-சேவை மையங்கள் வழியாகவே வருமான சான்றிதழ் உள்ளி ட்ட சான்றிதழ்களை விண்ண ப்பித்து பெற முடியும் என்ற நிலை உள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற நிலையில் பள்ளிக ளில் குழந்தைகளை சேர்ப்ப தற்கு தேவைப்படும் சான்றி தழ்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத னால் மாணவர்களை பள்ளி யில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இ-சேவை, கூட்டுறவு சங்க அலுவலகங்களை திறக்கவும், பள்ளிகளில் மா ணவர்களை சேர்க்க தேவை யான சான்றிதழ்களை பெற வும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக் கையில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.