tamilnadu

ஆபத்தான நிலையில் பட்ட மரங்கள்: விபத்து ஏற்படும் முன் அகற்றிட மனு

நாகர்கோவில், ஜூலை 26- குழித்துறை- ஆலஞ்சோலை நெடுஞ் சாலை ஓரமாக குஞ்சாலுவிளை படப் பச்சை பகுதியில் ஆபத்தான நிலையில் நிற்கும் அயனி மரத்தையும், அதே சாலை யில் கடையல் மேலத்தெரு பக்கமாக ஆலஞ்சோலை செல்லும் ரோட்டின் ஓரமாக நிற்கும் மற்றொரு அயினி மரத்தையும் விரை வாக அகற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடையல் பேரூராட்சி முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.சேகர் பத்ம நாபபுரம் சார் ஆட்சியருக்கு அளித்துள்ள மனு விபரம் வருமாறு: அயனிமரம் பட்டுப் போன நிலையில் மிகவும் ஆபத்தாக எப்போது வேண்டுமா னாலும் சாலையில் விழலாம் என்ற நிலை யிலுள்ளது. அதைப் போன்று கடையால் மேலத்தெருவிலிருந்து ஆலஞ்சோலை செல்லும் சாலையில் மேலத்தெரு பக்கமாக மிக உயரமாக வளர்ந்த அயனிமரம் ஒன்றும் பட்டு போய் நிற்கிறது. இந்த இரு மரங்க ளும் சாய்ந்தால் சாலையில் செல்லும் வாக னங்கள் மீது விழுந்து மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அவசரமாக இம் மரங்களை அப்புறப்படுத்த தேவையான நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.