tamilnadu

img

ஆம்புலன்ஸ், மருத்துவமனையிலிருந்து கோவிட் பரவும் ஆபத்து உடனுக்குடன் கிருமி நீக்கம் செய்ய சிபிஎம் வலியுறுத்தல்

நாகர்கோவில், ஜூலை 23- நோயாளிகளின் அறைகள், ஆம்புலன்ஸ்களை உடனுக்குடன் கிருமி நீக்கம் செய்து நோய் பரவா மல் தடுக்குமாறு சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமையில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரேவிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் விபரம் வருமாறு,  கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டவர்களை பாது காக்கவும் சில ஆலோசனைகளை  கவனத்துக்கு கொண்டு வரு கிறோம். இப்பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படை யில் தலையிட வேண்டும். கன்னி யாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மாவட்ட மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வை உருவாக்கி யுள்ளது. 

பரிசோதனை 
முடிவு வர தாமதம் நோய் அறிகுறி உள்ளவர்க ளுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், நாகர்கோவிலில் உள்ள ஒரு தனி யார் ஆய்வகத்திலும் கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோ தனை நடைபெறுகிறது. பெரும் பாலான நேரங்களில் அறிகுறி உள்ள நபர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சளி பரிசோத னைக்காக சளி கொடுக்கின்றனர். இவர்களின் சளி ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்து தகவல் சொல்ல குறைந்தது மூன்று நாட்கள் வரை ஆகிறது. மூன்று நாட்களும் சம்மந்தப்பட்ட நபர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றி வருகின்றனர். இதனால் தொற்று அதிகமாக பரவ  வாய்ப்புள்ளது. இவர்களை தனி மைப்படுத்த எந்த முன் ஏற்பாடும் இல்லை.  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ மனையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சளி பரிசோ தனை செய்வதாக நிர்வாகம் குறிப்பி டுகிறது.

காலதாமதம் இன்றி சளி  பரிசோதனை செய்ய பரிசோதனை கருவி மற்றும் மருத்துவ பணியா ளர்கள் இல்லை. உடனுக்குடன் பரிசோதனைக்கு தேவையான ஏற்பாடு மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். சளி பரிசோதனை மையங்களை பரவலாக்க வேண்டும். இது நோய் பரவாமல் இருந்து மக்களை பாதுகாக்க பயன்படும். மேலும் சளி பரிசோ தனை செய்வதிலும் பாசிட்டிவ், நெகட்டிவ் தீர்மானிப்பதில் பல தவறுகள் நடைபெறுகிறது. இது மக்களுக்கு அச்சத்தை கொடுக்கி றது. இது மருத்துவர்களின் பணி சுமையால் ஏற்படும் கவனக் குறை வும், தரமற்ற பரிசோதனை கருவி களுமே என கருதுகிறோம். இவற்றை சரி செய்ய வேண்டும். மேலும் தொற்று அறிகுறி உள்ளவர்களை உடனுக்குடன் வீடுகளில் சென்று மருத்துவமனை அழைத்துவர போதுமான ஆம்புலன்ஸ் வசதி இல்லை.

ஆம்புலன்ஸ்களை அதிகப்படுத்துக!
மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் மிக குறைவாக உள்ளது. அதுவும் இதர நோயாளிகள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்க ளை அவசர பிரிவுக்கு கொண்டு சென்றால் கொரோனா நோயாளி களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் இல்லை. இதனால் காலதாமதம் ஏற்படுவது தொற்று அதிகரிக்க வாய்ப்பாக மாறிவிடும். மேலும் தொற்று பாதித்த ஒருவரை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் அடுத்த நோயாளிளை கொண்டுவர அவசரமாக புறப்படுகிறது. இதில் ஆம்புலன்ஸ் எந்த சுத்தமும் செய்யும் ஏற்பாடும் இல்லை. இது தொற்று பரவுவதற்கான வாய்ப்பாக  மாறுகிறது. எனவே கொரோனா நோயாளிகளுக்கென ஆம்புலன்சு கள் அதிகமாகவும், ஆம்புலன்சில் சுகாதார வசதி செய்திடவும் தேவை யான தனி ஏற்பாடு செய்திட வேண்டும்.

அவசரத்துக்கு மாவட்ட நிர்வாகம் தனியார் ஆம்புலன்சு களை வாடகைக்கு எடுக்கலாம். நோய் அறிகுறியுள்ளவர்களை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பள்ளிகூடங்கள், கல்லூரி களில் தனிமைப்படுத்தி வைக்கப் பட்டுள்ளனர். இது போன்று மாவட்டத்துக்கு வெளியிலிருந்து வருபவர்களை சளி மாதிரி எடுத்து விட்டு இதுபோன்ற மையங்களில் தங்க வைக்கின்றனர். பரிசோதனை முடிவு வரும்வரை இவர்கள் இங்கே தனிமையில் இருக்க வேண்டும். இவர்களுக்கு உணவு, தண்ணீர் வழங்குவதில் காலதாமதம் மற்றும் போதுமான அளவு சத்தான உணவு இல்லாமையால் வெளியே வந்து பிரச்சனைகள் உருவாக்குகின்றனர்.

சுத்தம் செய்யாமலே...
கட்டுப்பாடு இல்லாமல் ஊர் சுற்றுகின்றனர். இதுபோன்று தனி யார் நிறுவனங்கள் இலவசமாக அறைகளை கொடுத்து விடுகின்ற னர். நோயாளி தங்கிய ஒரு அறை அல்லது படுக்கையில் எந்தவித சுத்தமும் செய்யாமல் மறுநாள் வேறு ஒருவருக்கு அந்த படுக்கை அல்லது அறை கொடுத்து விடு கின்றனர். இதனால் நோய் இல்லாத வர்களுக்கும் நோய் பரவுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகு திகளை சுத்கம் செய்திட போதிய தூய்மைப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடு வேண்டும். நோயாளிகளுக்கு அரசு அறிவித்துள்ளபடி சத்தான உணவு கள் வழங்கப்படவில்லை. சத்தான உணவு வழங்கப்பட வேண்டும்.  மேலும் வயோதிகம் மற்றும் மிகவும் பாதிக்கப்பட்ட நோயாளி களுக்கு அவர்கள் இடத்திற்கே உணவுகள் கொண்டு கொடுக்க வேண்டும்.

இதற்கு அதிகமான ஊழியர்கள் வேண்டும். நோயாளி களுக்கு வெந்நீர் வழங்குவதற்கான வசதி இல்லை. ஹீட்டர் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். தேவை யான அளவு வெந்நீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இது போல் மிக குறைவான கழிவறைக ளே உள்ளது. தற்காலிக கழிவறை கள் அவசரமாக ஏற்பாடு செய்ய வேண்டும். சுத்தம் செய்ய தேவையான ஊழியர்களை நியமிக்க வேண்டும். மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கும், அரசு உள் நோயாளிகளுக்கும் தடை யின்றி மருத்துவம் தொடர வேண்டும். அறுவை சிகிட்சையை கால தாமதப்படுத்த கூடாது. கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ வசதி கள் பாதுகாப்பாகவும், கொரோனா நோய்த்தொற்று பரவாமலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

உள்ளுரில் சிகிச்சை மையம்
தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளிடமிருந்தும், சளி பரி சோதனைக்கு செல்லும் நபர்களிட மிருந்தும் அதிகமான தொகை வசூ லிக்கப்படுகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும். பல கிராமங்களில் போதிய விழிப்பு ணர்வு இல்லாத நிலையில் மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்த தயங்கு வதுடன், சுகாதார பணியாளர்க ளிடமும் மோதி கொள்கின்றனர். காவல்துறையினர் எங்களை கைதிகளை அழைத்து செல்வது போல் நடந்து கொள்கின்றனர். சமு தாயத்தில் தாங்கள் குற்றவாளிகள் போல் சித்தரிக்கப்படுவதாக சுகா தார பணியாளர்கள் வருத்தப்படு கின்றனர்; எனவே அதிகமான மக்கள் தொகை கொண்ட கிரா மங்கள் குறிப்பாக கடற்கரை கிராமங்களில் நோய் அறிகுறி தென்பட்டவர்களை அங்குள்ள  பள்ளிக்கூடங்கள், திருமண மண்ட பங்களில் தனிமைப்படுத்தலாம். ஒரு மருத்துவர் மற்றும் செவிலியர், சுகாதார பணியாளர்களை நிய மித்தால் போதும். தனிமைப்படுத் தப்பட்டவர்களுக்கு உறவினர்கள் மற்றும் ஊர்மக்களின் உதவிகளும் கிடைக்கும்.  இ-பாஸ் முறை ஒழுங்கு படுத்தப்பட வேண்டும். இந்த நடைமுறை கேரளாவில் எளிய முறையில் உள்ளது. மறுக்கப்படும் போது காரணம் சொல்லப்படுகிறது.

அக்காரணத்தை நிவர்த்தி செய்து அனுமதி பெற உதவுகிறார்கள். நேரடி தொலைபேசி எண் உள்ளது. அதுபோல் நமது மாவட்டத்திலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.  ஊரக வேலை உறுதி திட்டத்தில் கோவிட் 19 தொற்றை காரணம் காட்டி 55 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு வேலை மறுக்கப் படுகிறது. இந்த ஏழை தொழிலா ளர்களுக்கு கொரோனா நிவார ணமாக வேலைக்கான ஊதியம் வழங்க வேண்டும். அரசு அறிவித்த முறைசாரா தொழிலாளர்களுக்கான உதவிகள் வழங்குவதில் குளறுபடி கள் சரிசெய்து அனைவருக்கும் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும்.  இதுபோன்று தூய்மை பணியா ளர்கள், சமையல், சலவை பணியா ளர்கள், செவிலியர்கள், மருத்து வர்கள், ஒப்பந்த சுகாதார பணியா ளர்கள், காவல்துறையினர் போன்ற வர்களுக்கு பாதுகாப்பான கவச உடைகள் தட்டுப்பாடின்றி தரமான தாக வழங்க வேண்டும். மேலும் இரவு பகலாக அர்ப்பணிப்புடன் பணிபுரியும் இவ்வித ஊழியர்க ளுக்கு சம்பளங்கள் பாக்கியின்றி வழங்குவதுடன், ஒருமாத ஊக்க தொகை வழங்க வேண்டும். தேவை யான நிதியினை அரசிடம் கேட்டு வாங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை, மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள் என்.முருகேசன், எ.வி.பெல்லார்மின், எம்.அகமது உசேன்,  என்.உஷா பாசி, மாநகர செயலாளர் மோகன் உள்ளிட்டோர் ஆட்சியரி டம் அளித்தனர்.