tamilnadu

குளத்து நீரில் மூழ்கி ஒருவர் பலி

நாகர்கோவில், மே16-கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அழகியநகரைச் சேர்ந்தவர் இளையராஜா (36). இவர், கடந்த ஓராண்டுக்கு முன்னர் வெள்ளிச்சந்தை காலனியை சேர்ந்த வினோதினி(28) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.தற்போது வினோதினி 3 மாதம் கர்ப்பிணியாக உள்ளார். இதன் காரணமாக, வினோதி தனது பெற்றோர் வீட்டில் உள்ளார். அவருடன் இளையராஜாவும் தங்கியிருந்தார்.புதனன்று மதியம் இளையராஜா மனைவி வீட்டின்அருகேயுள்ள குளத்தில் குளிக்க சென்றார். நீண்டநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையறிந்த அவரதுஉறவினர்கள் தேடினர்.இந்நிலையில், குளத்தின் கரையில் இளையராஜாவின் இருசக்கர வாகனம் நின்றதை கண்ட உறவினர், அங்கு தேடினர். அப்போது குளத்தில் இளையராஜா மிதப்பதை கண்டுஅதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளிச்சந்தை காவல் துறையினர், இளையராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

;