tamilnadu

2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

குழித்துறை: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மரமடி பகுதியில் கேரளாவிற்கு கடத்த பதுக்கி வைக்கபட்டிருந்த 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் வருவாய்த்துறை பறக்கும்படையினர் குளச்சல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரமடி சாலையோரத்தில் சந்தேகத்திற்கு இடமாக டார்ப்பாளால் மூடப்பட்டிருந்த இடத்தை சோதனை செய்தபோது சிறுசிறு மூடைகளில் சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக தயார் நிலையில் பதுக்கி வைத்திருந்ததாக தெரியவந்ததை தொடர்ந்து அரிசியை பறிமுதல் செய்தனர். உடையார்விளை அரசு கிட்டங்கியில் அரிசி ஒப்படைக்கப் பட்டது. கடத்திச் செல்வதற்கு அரிசியை பதுக்கிய நபர் யார் என்பது பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

;