கடலூர் வெளிச்செம்மண்டலத்தை சேர்ந்த பிஎஸ்என்எல்இயூ சங்க முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் ஏ.அண்ணாமலை- ஏ.ஜோதி ஆகியோரின் மகள் எ.அகல்யாவிற்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வெள்ளச்சி முத்துசாமியின் மகன் மருத்துவர் எம்.தமிழ்ச் செல்வன் ஆகியோரின் திருமணம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடலூரில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இந் நிகழ்ச்சிகளில் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சங்க தோழர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.