tamilnadu

கொய்யா பழங்களை கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

கடலூர், ஜூலை 26- பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றி யத்தில்  விளைந்துள்ள கொய்யா பழங்களை தோட்ட கலை துறையினர் கொள் முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து சங்கத்தின்  மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் மாவட்ட ஆட்சி யருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றி யத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள திருத்துறை யூர், சின்னப்பேட்டை, கரும்பூர், உறையூர், எனதிரி மங்கலம், ரெட்டிகுப்பம், கண்டரகோட்டை, பூண்டி, கட்டமுத்து பாளையம், புலவனூர்,  வரிஞ்சிபக்கம்  உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கொய்யா சாகுபடி செய்யப்படுகிறது.

இதில் லக்னோ,  ரெட் கொய்யா அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இந்த வகை கொய்யா சுவை மிகுந்தவையாகும். ஜூலை, ஆகஸ்ட், செப்  டம்பர் மாதங்களில் கொய்யா  அறுவடை காலமாக உள்  ளது. அறுவடை செய்யப்ப டும் கொய்யா பழத்தை வாங்க வியாபாரிகள் வர வில்லை.  வெளி மாவட்டங்க ளுக்கு அனுப்ப ஏற்பாடு  இல்லாததால் போதிய விலை கிடைக்காமல் பழத்தை என்ன செய்வது  என்று தெரியாமல் விவசாயி கள் குழம்பிப்போய் உள்ள னர். தற்போது அறுவடை செய்யப்படும் கொய்யாவை மாவட்ட தோட்டக்கலைத் துறை மூலம் கொள்முதல் செய்து விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பண்ருட்டி பகுதியில் கொய்யாப்பழத்தை பயன் படுத்தி ஜாம் மற்றும் பழரசம்  தயார் செய்யும் தொழிற் சாலையை உருவாக்க தமி ழக அரசு நடவடிக்கை மேற்  கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.