tamilnadu

img

கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கிட கோரி கடலூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சம்மேளனம் சிஐடியு துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னேற்றப் பேரவையின் செயலாளர் மணிமாறன், புரட்சியாளர் அம்பேத்கர் தொழிலாளர் விடுதலை முன்னணியின் கருணாநிதி, தொமுச வின் பாலசெந்தில்நாதன், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் சாமிநாதன், எல்எல்எப் சங்கர், சிஐடியு ஜான்விக்டர் உள்ளிட்டோர் உரையாற்றினர்.