போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொரோனா பொதுமுடக்க காலத்திற்கு ஊதியம் வழங்காமல் விடுப்பை கணக்கில் எடுக்கும் நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடலூர் போக்குவரத்து பணிமனை மண்டல அலுவலகம் முன்பு தொமுச பொதுச் செயலாளர் தங்க.ஆனந்தன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு சம்மேளன துணைத்தலைவர் ஜி.பாஸ்கரன், எம்எல்எப் பொதுச் செயலாளர் ஆர்.மணிமாறன், ஏஏஎல்எல்எப் செயலாளர் கருணாநிதி, ஐஎன்டியூசி செயலாளர் சாமிநாதன், சிஐடியு தலைவர் ஏ.ஜான் விக்டர், டிவிகே தலைவர் தணிகாசலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.