கடலூர், அக்.1- கடலூர் அருங்காட்சியகம் நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக பழைய ஆட்சியரகத்திற்கு இடமாற்றம் செய்யும் பணி துவங்கியது. கடலூர் விழுப்புரம் மாவட்டத்திற்கான அரசு அருங்காட்சியகம் கடலூர் -நெல்லிக் குப்பம் சாலையில் அரசு தலைமை மருத்துவ மனை எதிரில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் தொன்மையை அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு இடங்க ளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்கள், கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. பொதுமக்கள் கட்டணம் செலுத்தி யும், மாணவர்கள் இலவசமாகவும் பார்வை யிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடைபெறும். மாதம் ரூ.19 ஆயிரம் வாடகையாக செலுத்தி வாடகைக் கட்டடத்தில் இட நெருக்கடியுடன் இந்த அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், 2015 ஆம் ஆண்டில் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆட்சியரகம் வெளிச்செம் மண்டலம் பகுதிக்கு இடம் மாறியது. ஆங்கி லேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழைய மாவட்ட ஆட்சியரகத்திற்கு அருங்காட்சிய கத்தை மாற்ற வேண்டுமென சமூக ஆர்வ லர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்க ளுக்கு முன்பு பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ஒரு பகுதியை அருங்காட்சி யகம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் வெ.அன்புச்செல்வன் ஒதுக்கீடு செய்தார். அதற்கு சென்னையில் அருங்காட்சி யக இயக்குநரகமும் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பொருட்களை இடமாற்றம் செய்யும் பணி திங்கட்கிழமை துவங்கியது. இதுகுறித்து காப்பாட்சியர் செ.ஜெய ரத்னா கூறுகையில், அருங்காட்சியகத்தில் சுமார் 5 ஆயிரம் பொருட்கள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளன. இப்பொருட்களை இடமாற்றம் செய்திட ரூ.98 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பல டன் எடை கொண்ட பீடத்துடன் கூடிய சிலைகளை கிரேன் மூல மாக ஏற்றி மாற்றி அமைக்கும் பணி நடைபெறு கிறது. இதன்பின்னர் புதிய அரங்கு அமைக் கப்பட்டு அருங்காட்சியகம் செயல்படத் துவங்கும் என்றார். அருங்காட்சியக இடமாற்றம் தொடர்பாக பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலி யுறுத்தி வந்த நிலையில் அவர்களின் நீண்ட போராட்டத்திற்கு தற்போது வெற்றி கிடைத் துள்ளது.