கடலூர், ஜூலை 1- என்எல்சி நிறுவன விபத்தில் தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: இந்தியாவின் நவரத்தினங்கள் என்று அழைக்கப்படும் நிறுவனங்க ளில் என்.எல்.சி-யும் ஒன்று. இந்த நிறு வனத்தின் 2ஆவது அனல் மின் நிலையத்தில், 5ஆவது யூனிட்டில் பாய்லர் வெடித்து ஆறு தொழிலா ளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரி ழந்தனர். மேலும் 15க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மேல்சிகிச் சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள னர். இந்த கோர விபத்தில் இன்னும் பலர் பாதிக்கப்பட்டிக்கக் கூடும் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி யளிக்கின்றன. அதே 2ஆவது அனல் மின் நிலை யத்தில், இரண்டு மாதங்களுக்கு முன்பு 6ஆவது யூனிட் பாய்லர் வெடித்து, 5 தொழிலா ளர்கள் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
அதில் 3 பேர் தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த காயம் ஆறுவதற்கு முன்பே மீண்டும் இந்த கொடூர விபத்து நடந்துள்ளது. தொடர் விபத்துக்களால் பல தொழி லாளர்கள் உயிரிழக்கும் நிலை உள்ளது. எனவே தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு நெய்வேலி நிறுவன நிர்வாகமே முழு பொறுப்பேற்க வேண்டும். ஏற்கனவே நடைபெற்ற விபத்து கள் மரணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தி அதற்கு காரண மானவர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. குறிப்பாக, அனல் மின் நிலை யத்தில் பாய்லர்கள் பராமரிப்பு பணியை பொதுத்துறை நிறுவன மான திருச்சி பெல் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு மாறாக, தனிப் பட்ட ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத் துள்ளனர். ஒப்பந்ததாரர்கள் பாய்லர்களை முறையாக பரா மரிக்காத காரணத்தினாலேயே இது போன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகின்றன எனத் தெரிய வரு கிறது. இந்த ஒப்பந்த ஏற்பாடுகளில் ஊழல் - முறைகேடுகளும் இருப்ப தற்கு வாய்ப்புள்ளதாக கருத வேண்டியுள்ளது.
துயரத்தில் வாடுகிற உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம். நெய் வேலி நிறுவனம் இறந்துபோன தொழி லாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 50 லட்சம் நஷ்ட ஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணியும், படு காயமடைந்தவர்களுக்கு பூரண குணமடையும் வரை உயர் சிகிச்சை யும், தலா ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடும் அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், மத்திய அரசு நெய்வேலி நிறுவனத்தில் நடைபெறும் தொடர் விபத்துக்கள் தொடர்பாக உயர் மட்டக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமெனவும், அதில் சம்பந்தப் பட்ட உயர்மட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.