கடலூர், டிச.17- கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் பொது மக்கள் பயன் பாட்டிற்காக கட்டப்பட்ட இரும்புப் பாலம் உள்ளது. இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதி வாய்ந்ததாக இல்லையென கருதப்பட்டதால் கடலூர் மாவட்ட நிர்வாகம் இதில் பொதுமக்கள் செல்வதற்கு 3 வரு டத்திற்கு முன்பு தடை விதித்தி ருந்தது. இந்த பாலத்தின் மேல் குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய்கள் செல்கின்றன. இந்நிலையில் பாலத் தின் ஒரு பகுதி கடந்த ஒரு வருடம் பெய்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. மற்றொருபகுதி செவ்வாய்க் கிழமை காலை இடிந்து விழுந்தது. பாலத்தில் உடைந்து விழுந்த நேரத்தில் குடிநீர் குழாய் இணைப்பு துவாரம் வழியாக தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் பாலத்தின் கீழ் சிலர் குளிப்பது வழக் கம். செவ்வாயன்று அதிகாலையில் அதுபோல ஒரு சிலர் குளித்து வந்த னர் அவர்கள் வெளியேறிய பின்பு பாலம் உடைந்து விழுந்ததால் உயி ரிழப்பு தவிர்க்கப்பட்டது. பைப்லைன் உடைப்பால் 25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு மேல்நிலை தொட்டிகளுக்கு செல்லும் குடிநீர் தடைபட்டுள்ளது. இதனால் அண்ணா நகர் கேகே நகர் புதுப்பாளையம் வன்னியர் பாளையம் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட 10 வார்டுகளுக்கு குடிநீர் தடைபட்டுள்ளது.