tamilnadu

img

துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்

நெய்வேலி ஜவகர் பள்ளியில் பணியாற்றி வந்த துப்புரவு தொழிலாளர்கள் 24 பேரும் தங்களுக்கு மீண்டும் வேலை  வழங்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்தனர். என்எல்சி நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனையடுத்து, சிஐடியு காண்ட்ராக்ட் சங்கத் தலைவர் த.அமிர்தலிங்கம் தலைமையில் தொடர் முழுக்கப் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். மாதர் சங்க நகரச் செயலாளர் மாதவி, மாவட்டச் செயலாளர் மேரி, காண்ட்ராக்ட்  பாட்டாளி தொழிற்சங்க பொதுச்செயலாளர் முருகவேல் மற்றும் பலர் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.