tamilnadu

img

கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு

கடலூர், அக்.4- கொள் முதல் செய்த கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று(அக்.4) கட லூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  கடந்த 2017-18 ஆம் ஆண்டு விருத்தாசலம், பெண்ணாடம், திட்டக்குடி, ராமநத்தம் பகுதி விவசாயி களிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்த தனியார்  சர்க்கரை ஆலை நிர்வா கங்கள்,  விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு பாக்கியை உடனே வழங்க வேண்டும். விவசாயிகளின் பெயர்களில் வங்கியில் கடன் வாங்கிய ஆலை உரி மையாளர் ராம் தியாகராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆலை தொழிலா ளர்களுக்கு வழங்க வேண்டிய 12 மாத சம்ப ளத்தை உடனே வழங்க வேண்டும், அம்பிகா, ஆரூ ரான் சர்க்கரை ஆலைகளை மாநில அரசு ஏற்று நடத்த வேண்டும், கரும்பு பண பாக்கி ரூ.200 கோடியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும், விவசாயிகள் பெயரில் வங்கிகளில் ரூ.500  கோடிக்கு மேல் ஆலைகள் வாங்கியுள்ள கடனை சர்க்கரை ஆலைகள் பெய ரில் மாற்ற வேண்டும்,  மோசடி செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். சங்கத் தலைவர்கள் வி.ஜெயபால், ஆர்.தென்ன ரசு, எஸ்.முத்தமிழ்ச் செல்வன்  ஆகியோர் தலைமை தாங்கினர். சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  டீ.ரவிந்திரன், மாநில பொரு ளாளர் எம்.சின்னப்பா, மாநில துணைத்தலைவர் ஜி.ஆர்.ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன், பொருளாளர் எஸ்.தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.