சிதம்பரம், ஜூலை 26- சிதம்பரம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு, பிரசவ வார்டு, ஆண்கள், பெண்கள் வார்டுகள் உள்ளன. இங்கு தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளாக 500க்கும் மேற்பட்டோர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்கள். இங்கு பல வார்டுகளில் மின்விசிறிகள் பழுதடைந்து இயங்காமல் இருந்தன. இத னால் நோயாளிகள் அவதிப்பட்டனர். இதனை அறிந்த சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வினோத்குமார் மருத்துவரின் அனுமதியுடன் இயங்காமல் உள்ள மின்விசிறிகளை, அவரது மாற்றுத்திற னாளி நண்பர் கணபதி மூலம் சீரமைத்து தரு கிறார். இதுவரை 20க்கும் மேற்பட்ட மின்விசிறி களை அவர் சீரமைத்து வழங்கியுள்ளார். இதுகுறித்து வினோத்குமார் கூறுகை யில், ஒரு மின்விசிறி காயில் கட்ட ரூ. 400 வரை தேவைப்படுகிறது. இதுகுறித்து நான் சமூக வலைதளத்தில் பதிவு செய்கிறேன். என் தொடர்பில் உள்ளவர்கள் காயில் கட்டுபவ ருக்கு நேரடியாக பணம் அனுப்பி விடுகிறார் கள். இப்படித்தான் இந்த பணியை செய்து வருகிறேன் என்றார்.