கடலூர், ஜூலை 23- ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். கடலூர் முதுநகர் மீன் மார்க்கெட் அருகில் உள்ள பழக்கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் சுகந்தன் தலைமை யில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், கொளஞ்சி யப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போழுது ரசாயனக் கல், ரசாயன திரவம் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதையடுத்து அங்கிருந்த பழுக்க வைத்த 100 கிலோ மாம்பழம், வாழைப்பழங்களை பறிமுதல் செய்ததுடன், கடையின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அளித்து எச்சரித்தனர்.