tamilnadu

img

ஒரு லட்சம் மதிப்பு நிலத்திற்கு ரூ.7 ஆயிரம் நிர்ணயம்: விவசாயிகள் ஆவேசம்

சிதம்பரம், டிச.10- கடலூர் மாவட்டம் சிதம்ப ரம் அருகே விழுப்புரம் - நாகப்பட்டினம் மார்க்கமாக தேசிய நெடுஞ்சாலைக்கு விளை நிலங்கள் கையகப்ப டுத்தும் பணி நடைபெற்று வரு கிறது. இதந்காக கைய கப்படுத்தும் நிலத்திற்கு மிக குறைவாக பணம் ஒதுக்கீடு  செய்யப்படுவதை கண்டித் தும், தற்போதைய சந்தை நிலவரப்படி நிலத்திற்கு பணம் ஒதுக்கக் கோரி தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிதம்பரம் சார்ராட்சியர் அலு வலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க பொருளாளர் மாசிலா மணி தலைமை வகித்தார். குமராட்சி ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் மாமல்லன், விவசாய சங்க மாவட்டச் செயலாளர் மாதவன், விவ சாய சங்க மாவட்ட செயற்  குழு உறுப்பினர் ராமச்சந்தி ரன், மாவட்ட துணை செய லாளர் மூர்த்தி, விவசாய  சங்க பிரதிநிதி மணிவண் ணன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தேசிய நெடுஞ் சாலையை ஒட்டியுள்ள நிலங்  களுக்கு ஒரு சென்ட்க்கு 6,800 வீதம் மட்டுமே ஒதுக்கி உள்ளனர். தற்போது அந்த  இடம் செண்டு ஒரு லட்ச  ரூபாய்க்கு விற்பனையாகி றது. கூடுதல் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்,  தென்னை மரம், மோட்டார் கொட்டா உள்ளிட்டவை களுக்கு தனி இழப்பீடு வழங்க வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நிலம் கையகப்படுத்தப்பட்ட பயனாளிகளுக்கு மாற்று  இடம் வாங்கிக் கொள்வ தற்கு ஏதுவாக உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.