tamilnadu

img

மக்கள் விரோத சட்டங்களை தூக்கி எறிய வேண்டும் விருத்தாசலம் கூட்டத்தில் உ.வாசுகி பேச்சு

கடலூர், மார்ச் 2- மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில்  விருத்தாசலத்தில் நடைபெற்ற அரசியல் விளக்க பொதுக்கூட்டத்தில் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில்,“ மக்கள் அதிகம் பயன்படுத்தி வரும் சிலிண்டரின் விலை உயர்ந்துகொண்டே செல்கி றது. இதே நிலை நீடித்தால் ஏழை மக்கள் இவற்றை வாங்க முடியாத நிலை ஏற்படும்” என்றார். அரசியல் சாசன சமத்துவக் கோட்பாடு இருப்பதால் தான்  தீண்டாமை குற்றமாக கருதப்படு கிறது. அரசியல் சாசனத்தை சிதைத்து விட்டல் பாஜாக செய்யும் அனைத்தும்  அங்கீகரிக்கப்படும். ஆகவேதான் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தி வருகிறது என்றும் அவர் கூறினார்.  தேச விடுதலை சாதி, மதம் கடந்து  மக்கள் பங்கேற்பால் கிடைத்தது. இதுவரை அரசியல் சாசனத்தில் செய்த திருத்தங்கள் அதனை வலுப்ப டுத்துவதாக இருந்தது. தற்போது பாஜக செய்யும் திருத்தம் அரசியல் சாசனத்தின் அடி மடியில் கை வைத்துள்ளது. பாரத் மாதாகி ஜெய், ஜெய் ஸ்ரீராம் கோஷம் மக்களை தாக்குவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரம் என்று பழமொழி உண்டு.  ஆனால் இன்று ஆட்சி செய்கிற வர்கள் மசூதியை தீ வைத்துக் கொளுத்தி தான் தேசபக்தியை நிரூ பிப்போம் என்பது பெரும் ஆபத்து என்றும் வாசுகி தெரிவித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றால்  காவல்துறையினர் அனுமதி கொடுக்க மறுக்கின்றனர். ஏன் என்று  கேட்டால் மத்திய அரசு சட்டம் இயற்றி யுள்ளது. சட்டத்துக்கு எதிராக போராடக் கூடாது என்று கூறுகின்ற னர். ஆனால் இந்தியாவில் சட்டங்கள்  மக்களை பாதிக்கும் போது, அது மன்னர் ஆட்சியாக இருந்தாலும் சரி,  அன்னியர்கள் ஆட்சியாக இருந்தா லும் சரி, சுதந்திர இந்தியாவாக இருந்தாலும் சரி அதை தூக்கி எறியும் போராட்டத்திற்கு என்றுமே மக்கள் தயங்கியது கிடையாது.  மத்திய அரசின் கொள்கைகளையும் அவர்கள் கொண்டு வந்துள்ள சட்டங்களை சாதி, மதம் கடந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் வாசுகி கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமை தாங்கினார். திட்டக்குடி வட்டச் செய லாளர் எஸ்.காமராஜ், நெய்வேலி நகரச் செயலாளர் எஸ்.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக் குழு உறுப்பினர் வழக்கறி ஞர் ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம், மாநிலக் குழு உறுப்பினர் ஜி. மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.திருஅரசு, மாவட்டக் குழு உறுப்பினர் எம்.மீனாட்சி, ஏ.வேல்முருகன், வி.மேரி, பி.முத்து லட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். புதுவை சப் தர் ஹாஷ்மியின் அரசியல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் சிவஞானம் நன்றி கூறினார்.