tamilnadu

ஊராட்சி ஊழியர்களுக்கு 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்குக

கடலூர்,  ஜூலை 23- தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்  தொட்டி இயக்குப வர்கள் மற்றும் துப்புரவு  பணியாளர்கள் சங்கத்தின்  மாநிலத்  தலைவர் எஸ்.ராமர் தலைமையில் நிர்வாகிகள் கடலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில், மாவட்டத்திலுள்ள 683 கிராம ஊராட்சிகளில் பணிபுரி யும் மேல்நிலை நீர்த்தேக்கத்  தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணி யாளர்கள், தூய்மை காவலர்களுக்கு மாதந்தோறும்  5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு  ஊதியத்தில்  பிடித்தம்  செய்யப்பட்ட  குடும்ப நல பாதுகாப்பு  நிதியை மாதந்தோறும் அரசு  கணக்கில் செலுத்துவதை உறுதி செய்ய  வேண்டும். சீருடை, கையுறை,  டார்ச் லைட் போன்ற உபகரணங்கள் வழங்க வேண்டும்.  ஊராட்சிமன்றத் தலைவர்களால் மோட்டார்  இயக்குபவர்கள், தூய்மை  பணியாளர்கள், தூய்மை  காவலர்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியி லிருந்து விடுவிக்கப்படுவதால் அவர்களின்  வாழ்வாதாரம் பாதிக்கப்படு கிறது. எனவே, வட்டார வளர்ச்சி அலுவலர்களின் அனுமதியின்றி பணி நீக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது. 2019ஆம் ஆண்டில் உயிரிழந்த மோட்டார் இயக்குபவர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் உள்ள குடும்ப  பாதுகாப்பு  நிதியை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.