சிதம்பரம்,மே 13- சிதம்பரத்தில் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் நந்தனார் ஆண்கள் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி கட்டிடங்களை வகுப்பறைகளாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஆதிதிராவிடநலத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம் ரூ.4 கோடியே 25 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் இரண்டு அடுக்கு மாடி வசதியில் 33 வகுப்புறைகள் கொண்ட புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியது. இந்த கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைத்தார். இந்த பள்ளிக்கு வருகை தந்த சிதம்பரம் சட்ட மன்ற தொகுதியின் எம்எல்ஏ பாண்டியன் குத்து விளக்கேற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தாட்கோ விழுப்புரம் கோட்ட செயற்பொறியாளர் மணிவண்ணன், உதவி செயற்பொறி யாளர் காதர்பாட்ஷா, கடலூர் கோட்ட செயற்பொறியாளர் அருண்குமார், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின துறை நிதி பரிந்துரைச் குழு உறுப்பினர் தில்லை. சீனு, பள்ளியின் ஆசிரியர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.