சிதம்பரம்,ஆக.20- அண்ணாமலை பல்க லைக்கழக தொண்ணூறாம் ஆண்டு நிறைவு விழாவை யொட்டி யோகா கல்வி மையம் சார்பில் தொற்று நோய் அல்லாத நோய்களி லிருந்து காத்துக்கொள்ள வும் நோய்வராமல் தடுப்ப தற்குமான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை நடை பெற்றது. இந்த பயிற்சியை பல் கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். யோகா மைய இயக்குநர் (பொ) முனைவர் கி.வெங்க டாஜலபதி வரவேற்றார். கல்வியியல் புல முதல்வர் ஞானதேவன் தலைமை உரையாற்றி யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்து ரைத்தார். பல்கலைக்கழக துணை வேந்தர் இன்றைய கால சூழ்நிலையில் நோய் வருவ தற்கான காரணங்கள், வாழ்க்கை முறை மாற்றத் தால் ஏற்படக் கூடிய இன் றைய சமுதாயத்தை அச்சு றுத்தக் கூடிய நோய்களான இரத்த அழுத்தம், இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் புற்றுநோய் போன்ற வற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள நம் தமிழர் பாரம்பரிய முறை யான இயற்கை மருத்துவ மும், யோகா வாழ்வியல் முறையும் ஜப்பானிய தண்ணீர் சிகிச்சை முறை பற்றியும் சிறப்பாக அனை வருக்கும் பயன்படும் வகை யில் எளிய முறையில் எடுத்துரைத்தார். யோகா மைய இயற்கை மருத்துவர் ருக்மணி தொற்று அல்லாத நோய்களுக்கு இயற்கை மருத்துவத்தின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார். யோகா பயிற்றுனர்கள் சாந்தி, பார்த்தசாரதி, முடக்கு நீக்கி யல் மற்றும் யோகா பயிற்சியாளர் தயாளன் ஆகி யோர் பயிற்சி பட்டறையில் பங்கு பெற்றவர்களுக்கு பயிற்சியளித்தனர். இவ்விழா வில் பல்கலைக்கழகத்தை சார்ந்த ஏராளமான பேராசிரி யர்கள், ஆராய்ச்சி மாண வர்கள், பல்வேறு துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் யோகா கல்வி மற்றும் ஆராய்சித் துறையை சார்ந்த ஆசிரியர் மற்றும் ஊழியர் கள் செய்திருந்தனர்.