சிதம்பரம், ஜூன் 27- சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஞாயிற் றுக்கிழமை திருமஞ்சன விழா நடைபெற இருந்தது. இந்நிலையில் பொது முடக்கம் அமலில் உள்ளதால் மிகவும் எளிய முறை யில் விழாவைக் கோவிலுக்கு உள்ளே நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டது. மேலும் 150 தீட்சிதர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து தீட்சிதர்களுக்கும் கொரோனா பரிசோதனை முடிவின் அடிப்ப டையிலேயே அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 150 பேருக்கும் செய்யப் பட்ட பரிசோதனையில் 2 பேருக்குத் தொற்று உறுதியானது. இதையடுத்து 5 தீட்சிதர்க ளுக்கு மட்டுமே வருவாய்த் துறை அதிகாரி கள் அனுமதி அளித்தனர். ஆனால் வெள்ளிக் கிழமை இரவு பூஜை முடிந்து தீட்சிதர்கள் கோவிலை விட்டு வெளியே வரவில்லை.
இதனைத் தொடர்ந்து சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முரு கேசன் தலைமையில் காவலர்கள் கோவி லுக்கு உள்ளே சென்று தீட்சிதர்களை வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் செல்ல மறுத்தனர். இந்நிலையில் தொற்றால் பாதிக்கப் படாத 148 பேரையும் கோவிலுக்குள் அனு மதிக்க வேண்டும், இல்லை என்றால் அனை வரும் சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைப் போம் என்று இரவு 1 மணிக்குத் தீட்சிதர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து சிதம்ப ரம் சார் ஆட்சியர் விசுமகாஜன், காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் தீட்சிதர்களிடம் தற்போது நிலவும் பிரச்சனையை எடுத்துக் கூறினார். அதனை தீட்சிதர்கள் ஏற்க வில்லை. இதே நிலை நீடித்தால் கோவிலுக்கு சீல் வைக்கும் நிலை ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தீட்சிதர்கள் 25 பேரை மட்டும் அனுமதிக்க கோரினர். இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் அவர் களை மட்டும் அனுமதித்தனர்.