tamilnadu

img

தாழ்வான மின்கம்பி உரசி  விவசாயி பலி

 சிதம்பரம், அக்.9- கடலூர் மாவட்டம் குமராட்சி அருகே வெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம். இவர் அதே கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டார்.  அப்போது அவரது வயலில் தாழ்வாக சென்ற மின் கம்பியில் எதிர்பாராதவிதமாக அவரது உடல் பட்டு மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதனை கண்ட அப்பகுதியினர் குமராட்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.  இதனைத்தொடர்ந்து சிதம்பரம் மருத்துவமனைக்கு அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விவசாயி பன்னீர்செல்வத்துக்கு தனலட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.  இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் கூறுகையில், “வெள்ளூர் மற்றும் அதன் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்சாரக் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்கிறது. இதுகுறித்து பல முறை மின்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் இதுபோல மின் விபத்து ஏற்படுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்றனர்.