tamilnadu

ஆகம விதிகளை மீறிய தீட்சிதர்களிடம் விசாரணை

சிதம்பரம், செப். 17- கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்ட பத்தில்  கடந்த 11 ஆம் தேதி தொழிலதிபர்கள்  குடும்ப திருமணம் ஆகமவிதிகள் மற்றும் மரபு களை மீறி தடபுடலாக நடத்தப்பட்டது. இதற்கு  தீட்சிதர்கள் அனுமதி கொடுத்துள்ளனர்.  இந்த சம்பவத்திற்கு சிவபக்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொது மக்கள் என அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் சமூக வலை தளங்களில் இது வைரலாகியது. திருமணத்திற்கு அனுமதியளித்த தீட்சி தர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சிலர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் புகார் கொடுத்த தரப்பினரையும், தீட்சிதர்கள் தரப்பினரையும் அழைத்து சிதம்பரம் காவல்  துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் விசா ரணை நடத்தினர். இதில் தீட்சிதர்கள் சார்பில் பட்டு, நவ மணி, பாஸ்கர் தீட்சிதர்கள் உள்ளிட்டவர்கள்  கலந்துகொண்டு கோயிலில் நடைபெற்ற சம்ப வம் வருந்தத்தக்கது. என்றும் சம்பந்தபட்ட வர் மீது கோயில் நிர்வாகாம் சார்பில் நடவ டிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எழுத்துப்  பூர்வமாக வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுத்தனர். இதன் பேரில் தீட்சிதர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தவர்கள் வழக்கை திரும்ப பெறுவதாகக் கூறியுள்ளனர். சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் இது குறித்து வரும் 23 ஆம் தேதி அடுத்தக் கட்ட  கூட்டம் நடைபெறுகிறது. இதில் திரு மணம் நடத்தியவர்கள், தீட்சிதர்கள், இந்த  சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ட னத்தை பதிவுசெய்தவர்கள் என அனைவரை யும் வரவழைத்து கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து தீட்சி தர்களை விசாரணை செய்த சம்பவம் சிறு  பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அனுமதி என்ற பெயரில் ஆகமவிதியை மீறி நடரா ஜர் கோயிலை நட்சத்திர ஓட்டலாக மாற்றிய  தொழிலதிபர்கள் மீதும் அந்த கூட்டத்தில் நட வடிக்கை மேற்கொள்ளபடும் என்று கூறப்படு கிறது.