tamilnadu

img

வெள்ள தடுப்பு நடவடிக்கை: கடலூர் ஆட்சியரிடம் சிபிஎம் வலியுறுத்தல்

கடலூர், அக்.21- கடலூர் மாவட்டத்தில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வே. அன்புசெல்வனிடம் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆட்சியரிடம் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.ஆறு முகம் அளித்த மனுவின் விவரம் வரு மாறு:- வடிகால் மாவட்டமாக உள்ள கட லூர் மாவட்டம், தொடர்ச்சியாக வட கிழக்கு பருவமழை காலங்களில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வரு கிறது. இம்மாவட்டத்தின் நீர்  தேவை, நீர்மேலாண்மை, நீர் நிலை  ஆதார பாதுகாப்பு ஆகியவற்றில் கவ னம் செலுத்தி மழை, வெள்ள நீரை  தேக்கவும், இயற்கை பேரிடரிலிருந்து மக்களை பாதுகாக்கவும் தொலை நோக்கு பார்வையுடன் நிரந்தரமான திட்டங்களை உருவாக்கி செயல்ப டுத்த வேண்டும். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில், பருவ மழை தொடங்கி  விட்டதால் வெள்ள பாதிப்புகளி லிருந்து மாவட்ட மக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடலூர் நகரில் கெடிலம் ஆற்றின் இருபுறமும் கரைகளை பலப்படுத்த வேண்டும். 22வது வார்டு பகுதி முழுவதும் மழைநீர் வடிகாலை சரி செய்ய வேண்டும். கெடிலம் நதி வெள்ளநீர் குடியிருப்பு பகுதியில் உள்ளே புகாமல் இருப்பதற்கு வடி கால் பகுதியில் ஷட்டர். பெண்ணை யாறு, கெடிலத்தில் குடியிருப்பு பகுதி களில் இருந்து நீர் வெளியே செல்ல வும், ஆற்று நீர் உள்ளே வராமல் இருக்கவும், தண்ணீர் வெளியேறும் இடங்களில் இரண்டு பக்கமும் திறக்  கக்கூடிய ஷட்டர் அமைக்க வேண்டும்.  பாதிரிக்குப்பம், நத்தப்பட்டு, கோண்டூர், உப்பலவாடி பகுதிகளை நகராட்சியுடன் ஒருங்கிணைத்து ஒருங்கிணைந்த வடிகால் பகுதி  ஏற்படுத்த வேண்டும். பாதிரிக்குப் பம் சின்னவாய்க்கால், பெரிய வாய்க்  கால் மோகினிபாலம் வரை ஆக்கிர மிப்புகள் அகற்றி மழைநீர் செல்ல வடிகால் ஏற்படுத்த வேண்டும். கடலூர் ஒன்றியம் சி.என்.பாளை யம் திடீர்குப்பம் பகுதியில் ஏரிக்கு  செல்லும் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்  காலை தூர்வார வேண்டும். நடு வீரப்பட்டு நரியன் ஓடையின் கரை களை பலப்படுத்த வேண்டும், தூக் கணாம்பாக்கம், குட்டியாங்குப்பம் வாய்க்காலை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். பெருமாள் ஏரியின் அணையை பலப்படுத்த வேண்டும். சேதமடைந்த மதகு ஷட்டர்களை சீரமைக்க வேண்டும்.  குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் பரவ னாறு, செங்கால் ஓடை, கன்னி யாக்கோயில் ஓடை ஆகியவற்றால் பாதிக்கப்படும் எல்லப்பன்பேட்டை, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், அகரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.  பண்ருட்டி ஒன்றியத்தில் ஓடை களில் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்  தால் பாதிக்கப்படும் விசூர், காட்டுப்  பாளையம், மேலிருப்பு பகுதிகளில் கரைகளை பலப்படுத்துவது, தடுப்பு சுவர் கட்டுவது, காட்டுப் பாளையத்தில் பாலம் சீரமைப்பது ஆகியவற்றை செய்ய வேண்டும். சிதம்பரம் நகரில் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதி களான ஓமக்குளம், மந்தக்கரை, சிவ சக்தி நகர், எம்.கே. தோட்டம் ஆகிய  இடங்களை பாதுகாக்க ஓமக்குளத்தி லிருந்து வெள்ளம் தாங்கி அம்மன்  கோயில் வழியாக செல்லும் வாய்க்கா லில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றி, தூர்வார வேண்டும். வடக்கு  ராஜன் வாய்க்கால், 7 கண் மதகு  வாய்க்கால் ஆகியவற்றை அகலப்ப டுத்தி தூர்வார வேண்டும். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐஎல்எப்எஸ் நிறுவனத்தால் ஆக்கிரமித்து பக்கிங்காம் கால்  வாயில் கட்டப்பட்டுள்ள தரைப் பாலத்தை உடைத்து அப்புறப்படுத்த வேண்டும். பெரியப்பட்டு அருகில் வாண்டியாம்பள்ளம் துவங்கி பக்கிங்காம் கால்வாயில் கலக்கும் ஓடையை தூர் வார வேண்டும். தென்பெண்ணை, கொள்ளிடம், வெள்ளாறு, கெடிலம், மணி முத்தாறு உட்பட மாவட்டத்திற்குள் வரும் அனைத்து ஆறுகளிலும் மழைநீரை சேமித்து தடுப்பணைகள் கட்ட வேண்டும். வீராணம், வெலிங்டன், வாலாஜா, பெருமாள் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகள், அனைத்து வாய்க்கால்களையும் தூர்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகள் அனைத்தையும் சீர்படுத்தி பராமரிப்பதற்கு தேவையான ஊழியர்கள் (லக்சர்கள்) நியமிக்க வேண்டும். முதல்வர் அறிவித்துள்ள தென்பெண்ணை ஆற்றில் பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் முதல் தளவானூர் விழுப்புரம் தடுப்பணை  மற்றும் திட்டக்குடி வட்டம் கூடலூர் தெற்கு பகுதி வெள்ளாற்றில்  தடுப்  பணை, புவனகிரி வட்டம் ஆதிவராக நத்தம், ஆதிவராக நல்லூரில் வெள்  ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை துவக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார். ஆட்சியர் சந்திப்பின் போது மாநிலக்குழு உறுப்பினர் கோ.மாத வன், செயற்குழு உறுப்பினர் வி.சுப்பு ராயன், மாவட்டக்குழு உறுப்பினர் கள் எஸ்.தட்சணாமூர்த்தி, ஜே. ராஜேஷ்கண்ணன், ஆர்.அமர்நாத், கே.கிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.