சிதம்பரம், டிச.5- சிதம்பரம் நகரத்திலுள்ள அரசு நந்தனார் ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, ராம சாமி மேல்நிலைப் பள்ளி நகரத்திலுள்ள அரசுப் பள்ளி களில் இந்திய மாணவர் சங்க கிளைகள் அமைக்கப் பட்டன. இந்நிகழ்ச்சியில் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் எஸ்.குமரவேல், மாவட்ட துணைச் செயலாளர் லெனின்,துணைத்தலைவர் ஆகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். நந்தனார் பள்ளி கிளை யின் புதிய தலைவராக கீர்த்தி வாசன், செயலாளராக ஆகாஷ் உள்ளிட்ட 13 பேர் கொண்ட கிளைக் குழு உருவாக்கப்பட்டது. அதேபோல் சிதம்பரம் ராம சாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் சங்கத்தின் புதிய தலைவராக அஜய் செயலா ளராக பிரதாப் உள்ளிட்ட 15 பேர் கொண்ட புதிய கிளைக் குழு உருவாக்கப்பட்டது.