tamilnadu

கொரோனா பரிசோதனையில் மாறுபட்ட அணுகுமுறை: முறைபடுத்த சிபிஎம் முயற்சி

கடலூர், ஜூன் 22- கடலூர் மாவட்டத்தில்  கொரோனா பரிசோதனை யில்  மாறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதாக மார்க்சிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு  மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் டி.ஆறுமுகம் அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:- சென்னையில் கோவிட்- 19 சோதனை மேற்கொள் ளும் போது அறிகுறி உள்ள வர்கள் சோதனை எடுக்கப் பட்ட பின்னர் அவரது வீட்டில்  தனிமையில் இருக்க வற்பு றுத்தப்படுகிறார்கள். சோதனையின் முடிவில் அவர்களுக்கு பாசிட்டிவ் என  அடையாளம் காணப்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்  துச் சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் காய்ச்சல் அறிகுறியுடன் சோதனை செய்யப்படும் அனைவரையும் மருத்துவமனையிலேயே உள்நோயாளியாக சேர்க்கப் படுகின்றனர்.  

இவ்வாறு உள்நோயாளி யாக சேர்க்கப்படுகிறவர்க ளில்  சிலர் ‘பாசிட்டிவ்’ உள்ள வர்களாகவும் இன்னும் பலர் ‘நெகட்டிவ்’ உள்ள வர்களாகவும் இருப்பார்கள். இருவரையும் ஒரே இடத்தில்  சோதனை முடிவுகள் வரும் வரையில் இரண்டு மூன்று நாட்கள் தங்க வைப்பதன் மூலம் அனைவருக்கும் நோய் தொற்றுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.  இதுமட்டுமின்றி சோத னையில் ஒருவருக்கு ‘நெகட்டிவ்’ என்று இருந்தாலும் இரண்டு நாள்  மருத்துவமனையில் தங்கி,  வீட்டுக்குத் திரும்பும் போது அவர் நோய் தொற்றுடன் செல்லும் ஆபத்தும் உள்ளது.  எனவே சோதனை  மேற்கொள்ளும் நபர்களை அவர்களது வீடுகளில் தனி மைப்படுத்தி வைக்கவும் அவர்களில் ‘பாசிட்டிவ்’ என  அடையாளம் காணப்படு பவர்களை மருத்துவ மனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும் நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.