கடலூர், செப். 30- கடலூர் ஒன்றியம் வடக்கு ராமாபுரம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு அருகி லுள்ள சடையன் ஏரி விவ சாய நிலங்களுக்கு நீர்ப் பாசன வசதி, ஆடு, மாடு போன்ற விலங்கினங்கள் நீர் அருந்தவும், ஏரியை ஒட்டி அமைந்துள்ள சுடுகாட்டில் ஈமச்சடங்கு செய்வதற்கும் இந்த ஏரியை பல ஆண்டு களாக பயன்படுத்தி வருகி றோம், ஐந்தரை ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த ஏரியை எங்களுக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் சுமார் 200 குடும்ப மும் பயன்படுத்தி வருகின்ற னர். மக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த ஏரியை ஒரு சிலர் ஆக்கிரமித்துக் கொண்ட தால் ஏரியின் பரப்பளவு மிக வும் குறைந்துள்ளது. தற் போது ஏரியை ஆழப்படுத்தி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏரியில் சுற்றளவில் அணை போடாமலும், ஏரிக்கு நீர் வரும் வழிகளையும், வடி கால் வழியையும் அடைத் துள்ளனர். அதுமட்டுமின்றி ஏரியின் மண்ணை திருடவும் செய்கின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் மனு கொடுத்துள்ளது. அதில், இந்த பிரச்சனையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். ஏரியின் எல்லையை அளந்து நான்கு பக்கமும் கரை அமைத்து சுற்று வட்டார மக்கள் அனை வரும் பயன்பெறும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு ராமாபுரம் கிரா மத்திற்கு சுடுகாடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் சடை யன் ஏரிக்கரையில் உள்ளது. ஏறத்தாழ 50 சென்ட் நிலப் பரப்பில் அமைந்துள்ளது. ஆனால் தற்போது சுடுகாடு முழுவதும் ஆக்கிரமிக்கப் பட்டு சுடுகாடு கானடிக்கப் பட்டுள்ளது. அதுமட்டுமன்றி சுடுகாட்டிற்கு செல்லும் வழி ஒத்தையடிப் பாதையாக மாறியுள்ளது. மேலும் வழியில் இரு புறங் களிலும் உள்ளவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி கொடுக்க நடவடிக்கை வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஜெ. ராஜேஷ்கண்ணன், வழக்கறி ஞர் நா.பாலகிருஷ்ணன் ஒன்றியக்குழு உறுப்பினர் அய்யாதுரை, மற்றும் கரு ணாநிதி உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.