கடலூர், ஆக. 20- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செய லாளர், கடலூர் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அல்லாபிச்சை படத் திறப்பு நிகழ்ச்சி சூரப்ப நாயக்கன் சாவடியில் சிபிஎம் நகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்றது. தோழர் அல்லா பிச்சையின் திருஉருவப் படத்தை கட்சியின் மாவட்டச் செயலாளர் டி. ஆறுமுகம் திறந்து வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் ஏ.எஸ்.சந்திர சேகரன், விடுதலை சிறுத்தை கள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா. தாமரைச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் வி. குளோப், திராவிடக் கழக மாவட்டச் செயலாளர் சிவக்குமார், மக்கள் ஜன நாயக கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் அஜ்மீர் கான் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருத வாணன், பி.கருப்பையன், வி.சுப்பராயன், ஒன்றியச் செயலாளர் ஜெ.ராஜேஷ் கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.ஆளவந் தார், டி.பழனிவேல், ஆர். தமிழரசன், நகர் குழு உறுப்பினர்கள் செந்தில் குமார், ஏழுமலை, ஸ்டாலின் கருணாகரன், எஸ்.கே.பக்கி ரான் திருமுருகன், தமிழ்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.