“ஒரு கட்சி பெரிய கட்சி என்பதற்கு என்ன அளவுகோல்? சட்டமன்றத்தில் எத்தனை எம்.எல்.ஏ. என்பதா? நாடாளுமன்றத்தில் எத்தனை எம்.பி. என்பதா? மத்திய மாநில அமைச்சர்கள் உண்டு என்பதா? கோடிக்கணக்கில் சொத்து புழங்குவதா? நிச்சயம் இல்லை. மக்களின் நலனுக்காக எத்தனை போராட்டம் நடத்தினர் என்பது தான் அளவுகோல். எவ்வளவு தியாகம் செய்தார்கள் என்பது தான்… எத்தனை பேர் இன்னுயிர் ஈந்தார்கள் என்பது தான்”. தேச விடுதலை போராட்டத்தில் சுதந்திரத்துக்காக, அவசர கால நிலையின் போது ஜனநாயக உரிமைகளுக்காக, பிளவுவாதம் தலை தூக்கிய போது இந்தியாவின் ஒற்றுமைக்காக, பெருநில உடமையாளர்களையும், அரசாங்கத்தையும், காவல்துறையையும் கடும் போராட்டத்தில் எதிர்த்து ஏழைகளுக்கு நிலம் வேண்டும், குத்தகை விவசாயிகளுக்கு உரிமை வேண்டும் என்பதற்காக… வங்காளத்தின் தேபாகா இயக்கம், கேரளாவின் வடக்கு மலபார் போராட்டம், புன்னப்ரா வயலார் என்ற வீர கதை. கீழத் தஞ்சையின் எழுச்சியான வெண்மணி போராட்டம், ஆந்திராவின் வீரத் தெலுங்கானா இயக்கம், வார்லி ஆதிவாசிகளின் நிலத்தின் மீதான உரிமைகளுக்காக, மனிதராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்கான போராட்டம்.… இது எந்த “பெரிய” கட்சிக்கு இருக்கிறது என்று கூறும், கூறித்தான் பாரும்…! கோலியாத் என்ற ராட்சசன் எவ்வளவு பெரியவனாக, பயங்கரமானவனாக இருந்தாலும், இறுதியில் வென்றது சின்னஞ்சிறு டேவிட் தான். கோலியாத் கையில் பெரும் ஆயுதம், டேவிட் கையில் கவண்கல் தான். அதே போல் ஆளும் வர்க்கங்களின் கையில் பெரும் நிதியும், ஒடுக்குவதற்கான அரசு அமைப்பும் இருக்கும் போது, கம்யூனிஸ்டுகள் கையில் மார்க்சியம் என்ற தத்துவமும், ஸ்தாபனம் என்ற ஆயுதமும் தான் இருக்கின்றன. மக்களைத் திரட்டி சமூகத்தைப் புரட்டிப்போடும் வலு இதற்குத் தான் இருக்கிறது. செங்கொடிக்கு ஏறிய சிவப்பு நிறம் தோழர்கள் சிந்திய குருதியினால் தான். உங்கள் பாதை சீனப் பாதையா, ரஷ்ய பாதையா என்ற போது, எங்களது பாதை இந்திய பாதை என்று முழங்கி, உலகின் இரு பெரும் கம்யூ னிஸ்ட் கட்சிகளின் பக்கம் சாயாமல், இந்திய மண்ணின் தனித்துவ பாதையைத் தேர்ந்தெ டுத்த இயக்கம் கம்யூனிச இயக்கம். பிறந்ததே அனல் கக்கும் சுதந்திர போராட்ட களத்தில் தான். உடனே வெள்ளை ஏகாதி பத்தியத்தால் தடை செய்யப்படுகிறது. எத்தனையோ இயக்கங்கள் போராட்ட களத்தில் இருந்த போதும், பிரிட்டிஷார் ஏன் அனைத்தையும் விட்டு விட்டு கம்யூனிஸ்ட் கட்சியை மட்டும் தடை செய்தார்கள்? அது தான் அவர்களை பயமுறுத்தியது. கிளர்ச்சி பாதையில் மக்களை இட்டுச்செல்லும் என அச்சப்பட்டார்கள். சுயராஜ்யம் என்ற காங்கிரசின் கருத்தாக்கத்துக்கு முற்போக்கான உள்ளடக்கத்தை அளித்தது கம்யூனிஸ்டுகள் தான். உழைப்பாளிகளின் கையில் அதிகாரம் என்பது தான் சுயராஜ்யம் என்று முன்வைத்தார்கள். டொமினியன் அந்தஸ்து என்று பிரிட்டிஷார் நீடிக்க வழி வகை செய்யும் பேச்சுகள் வந்த போது, பூரண சுதந்திரம் என்ற முழக்கத்தை முதலில் முன்வைத்தது கம்யூனிஸ்டுகள் தான்.
வர்க்கப் போராட்டமே வரலாறு:
அத்தகைய மாபெரும் இயக்கத்தின் வழித்தோன்ற லாக உருவானது தான் தென்னாற்காட்டின் வர லாறு. தமிழகத்தின் வர லாற்றை வெறும் கால கட்டத்தா லும், கட்டிடங்களாலும் மட்டும் அளந்து விட முடியாது. வரலாறைத் தனி மனிதர்கள் உரு வாக்குவது கிடையாது, அதில் அவர்க ளுக்கு ஒரு பாத்திரம் இருக்கலாம், வரலாறு என்பது வர்க்கப் போராட்டங்களின் வரலாறே. தொழிலாளிகளின் போராட்ட மும், விவசாயிகளின் போராட்டமும், விவ சாயத் தொழிலாளர்களின் போராட்டமும் யாருக்கும் குறையாமல் கடலூரில் நடந்தது, நடந்து கொண்டிருக்கிறது. ஏழைகளின் மனித உரிமைகளுக்கான போராட்டங்களில் முன்வரிசையில் கடலூருக்கு இடம் உண்டு. கடலூரின் வரலாறை உருவாக்கியது இத்தகைய போராட்டங்களே.
இவர்களே உண்மையான கதாநாயகிகள்:
உத்தர பிரதேசத்தின் உண்ணாவ் நகரில், ஓர் இளம் பெண், பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் செங்காரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதற்கு நீதி கேட்டதற்காக, அவர் தந்தை கொல்லப்பட்டார், அதைப் பார்த்த சாட்சி கொல்லப்பட்டார், பெண்ணின் இரு அத்தைகள் கொல்லப் பட்டனர், பெண்ணும், அவர் வழக்கறிஞ ரும் உயிருக்குப் போராடிக் கொண்டி ருக்கின்றனர். நீதிக்காக போராடியதற்காகக் கொடுக்கப்பட்ட விலை இது. அதே போல், நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் சுப்ரமணியம் அடித்துக் கொல்லப்பட்ட போது அவர் மனைவி ரேவதியிடம் காவல்துறை விலை பேசி னர்… ரூ.30 லட்சம். ரேவதி உறுதியாக மறுத்தார். கம்யூனிஸ்ட் கட்சி தான் கை கொடுத்தது. அதை நான் கெட்டியாகப் பற்றி நிற்கிறேன். வேறு யாரின் “ உதவிக்கரமும்” வேண்டாம் என்று உறுதி யான நிலை எடுத்தார். 4 ஆண்டுகளாக 4 குழந்தைகளை வைத்துக் கொண்டு, துயரங்களை அனுபவித்து வருகிறார். அவர் நினைத்திருந்தால், ரூ.30 லட்சத்தை வாங்கிக் கொண்டு வாழ்ந்திருக்க முடியும். அவர் நீதி வேண்டும், நியாயம் வேண்டும், அதற்கு எந்த விலை வேண்டு மானாலும் கொடுப்பேன் என்றார். 4 ஆண்டு களில் அவரோடு நின்றது நெய்வேலி ஜனநாயக மாதர் சங்கமும், என்.எல்.சி. தோழர்களும் தான். கடலூர் மையமும் அன்புடன் அக்குடும்பத்தின் சட்டகமாக நின்றது. இன்றைக்கு அதே ரூ.30 லட்சம் ஒரு தன்னார்வ அமைப்பின் தலை யீட்டால் சட்ட ரீதியாக அவருக்குக் கிடைத்தி ருக்கிறது. பத்மினி ஒரு விதமான போராட்டத்தின் கதாநாயகி என்றால், ரேவதி வேறொரு விதமான போராட் டத்தின் மையப்புள்ளி. அடி பட்டு மிதி பட்டு வீழும் மனி தர்களைத் தூக்கி நிறுத்தி, போராளிகளாக மாற்றும் ரசவாதம் கம்யூனிஸ்டுகளின் கையில் தான். இதனைப் பறைசாற்றும் முப்பெரும் விழா 24ஆம் தேதி சிறக்க வாழ்த்துக்கள்!!