tamilnadu

img

சி.கோவிந்தராஜன் - ஷாஜாதி 12-ஆவது நினைவு தினம்

கடலூர், ஜன.26- மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.கோவிந்தராஜனின் 12 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (ஜன.26)அனு சரிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் தொழிற்சங்கத் தலைவர்களில் ஒரு வரும்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பின ரும், நெல்லிக்குப்பம் நகர் மன்றத் தலைவரு மான சி.கோவிந்தராஜன், மாதர் சங்கத் தலை வர்களில் ஒருவரான ஷாஜாதி கோவிந்த ராஜன் ஆகியோரின்  12 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் தலைமையில் ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். மாநிலக்குழு உறுப்பி னர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், வி.சுப்பு ராயன், மாவட்டக்குழு  உறுப்பினர் எஸ்.தட்சணாமூர்த்தி, நகரச் செயலாளர் ஜெயபாண்டியன், பண்ருட்டி நகரச் செய லாளர் உத்தராபதி, சிஐடியு நிர்வாகிகள் திரு முருகன், கிருஷ்ணமூர்த்தி, ஆளவந்தார், ஆர்.வி.சுப்ரமணியன்,  மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெ. ராமலிங்கம்,  வழக்கறிஞர் ஜமிக்கி ராஜ், டாக்டர் தாரா,  மாதர் சங்க நிர்வாகி சந்திரா , தைனிஸ்மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;