tamilnadu

img

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ரூ 1.20 கோடியில் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு

சிதம்பரம், நவ.6- சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு 1 கோடியே 20 லட்சம் செலவில் புதிய தாக கட்டப்பட்டது. இதனை சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியை மருத்துவ மனையில் தலைமை மருத்துவ அதிகாரி தமிழரசன், மருத்துவர் அசோக் பாஸ்கர் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் குத்து விளக்கேற்றி வரவேற்றனர். இம்மருத்துவப் பிரிவுக்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 15 லட்சத்தில் கட்டில், படுக்கை, மேசை, நாற்காலி உள்ளிட்ட மருத்துவ தளவாடப் பொருட்களை வழங்கியுள்ளார்.  இதுகுறித்து தலைமை மருத்துவ அதிகாரி தமிழர சன் கூறுகையில், “மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாததால் பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளுக்கு கர்ப்பிணிகளை பரிந்துரை செய்து வந்தோம். தற்போது நம்மூரில் இது தொடங்கப்பட்டுள்ளது. வரவேற்கத் தக்கது. சிதம்பரம் மற்றும் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இது அமைந்து ள்ளது. எனவே இதனை பொதுமக்கள் நல்ல முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.